தேர்தலில் ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடும் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா !

 SRI LANKA-POLITICS-LABOUR-MAY DAY

எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி தனித்துப் போட்டியிடும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக இந்த நிகழ்வு இடம்பெற்றது.

10 அமைப்பாளர்கள் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர்.