ஒருநாள் அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகத் தயாராக உள்ளேன் : தோனி !

dhoni_pc_tri

குறுகிய கால பயணமாக பங்களாதேஷிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் தான் ஒருநாள்  அணித்தலைவர் பொறுப்பிலிருந்து விலகத் தயாராக உள்ளதாக தோனி அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்திய அணியின் தோல்விக்காக கூறப்படும் அனைத்து காரணங்களையும் தான் ஏற்றுக்கொள்ள தயார் எனவும், கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதன் மூலம் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நினைத்தால் பதவி விலக தான் தயாராக இருக்கிறேன். அதற்காக நான் மகிழ்ச்சி அடைவேன்.  இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாடுவேன்  என்றும் அவர் தெரிவித்திருப்பதானது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.