சிறி லாங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவமாகும் என்று கூறுகின்றார் அமைப்பாளர் – ஆசிரியர் யாகூப் ஹசன்

(எம்.ஐ.எம்.றியாஸ்,எம்.எம்.ஜபீர்)
  சிறி லாங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வரம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவமாகும் என மாவடிப்பள்ளி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் ஆசிரியர் யாகூப் ஹசன் தெரிவித்தார்.
  மாவடிப்பள்ளி கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது தலைமை உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  இக்கிராமத்தின் அபிவிருத்திக்காக மாகாண சபை உறுப்பினர் தவம் அவர்கள் பல்வேறுபட்ட உதவிகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்து வருவதைப் பாராட்டியாக வேண்டும்.இங்கு காணப்படும் குறைபாடுகளை முடிந்தவரை நிவர்த்தி செய்து தரவேண்டும் எனத் தெரிவித்தோடு இக்கிராம் என்றும் உங்களுடன் இருப்போம் என்பதில் எந்த ஐயமுமில்லை என மேலும் தெரிவித்தார்.
  மாவடிப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுாலகத்திற்கு தளபாடம் கொள்வனவு செய்வதற்காக ஒரு இலட்சம் ரூபா பணத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ்கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் இன்று ஒதுக்குவதாக இதன்போது தெரிவித்தார்.
  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் சிபாரிசுக்கமைவாக 18 இலட்சம் ரூபாச் செலவில் கரீம் வீதி கொங்றீட் வீதியாக அமைக்கப்பட்டது.இவ் வீதியின் மிகுதிப்பகுதியை கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்து தருவதாக இதன் போது மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
இவ் வீதி மற்றும் நுாலகத்திற்கான தளபாடம் எதிர் வரும் வாரத்தில் வழங்குவதுடன் புதிய வீதியும் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 35_Fotor
37_Fotor