முட்டாள்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டாம் : புத்திக்க பதிரன !

Buddhika

 

 தேர்தலின் போது தகுதியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண வலியுறுத்தியுள்ளார்.

மாத்தறை – உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, முட்டாள்களை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்ய வேண்டாம் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், அரசாங்கத்தில் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருந்தாலும் அவர்களிடம் மக்களுக்கான வேலைத் திட்டம் உள்ளதா என கேட்குமாறும் தகுதியற்றவர்களை அடித்து விரட்டுமாறும் அவர் மக்களிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்.