சாய்ந்தமருது மஸ்ஜிதுல் ஆரிபீன் பள்ளிவாசலின் 2 ம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவிகள் கோரப்படுகின்றன!

 

எம்.வை.அமீர்

சாய்ந்தமருது 10ம் பிரிவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஆரிபீன் பள்ளிவாசலின் முதலாம் மாடிக்கான கட்டுமானப்பணியை தற்போதுள்ள தற்போதுள்ள கடும் உஷ்ணமான காலநிலையை கருத்தில்கொண்டு, பள்ளிவாசலின் உட்பகுதியில் சூடு அதிகமாக உள்ளதாலும் இன்ஷா அல்லாஹ் 2015-06-20ம் திகதி சுபுஹு தொழுகையைத் தொடர்ந்து மௌலவி அல்ஹாபீழ் அலி அஹமத் (றஸாதி) அவர்களது மார்க்க சொற்பொழிவினைத் தொடர்ந்து ஆரம்பம் செய்யப்படவுள்ளது.

குறித்த இம்மேல் மாடிக்கான கொங்கிறீட் சிலப் போடுவதற்கு சுமார் 2657000.00 ரூபாய்கள் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இதில் மொத்தமாக 395 சதுர மீற்றர் பரப்பளவுள்ளது ஒரு சதுர மீற்றர் பரப்பளவுக்கு செலவாகும் தொகை ரூபாய் ஏழாயிரமாகும்.

எனவே அல்லாஹ்வின் புனித இல்லமான இம் மஸ்ஜிதை கட்டி முடிப்பதற்கு முடியுமான பங்களிப்பினை நல்குமாறும் இப்புனித ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் நல்லருளை பெற்றுக்கொள்ளுமாறும் அன்பாய் கேட்டுக்கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயரால் இப்பள்ளிவாசலின் நிர்மாணப்பணிகளுக்கு உதவி செய்ய விரும்புவோர் கீழ் உள்ள கணக்கு இலக்கத்துக்கு உதவிகளை அனுப்பிவைக்குமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றனர்.

மஸ்ஜிதுல் ஆரிபீன்

கணக்கு இலக்கம்: 0100108830001

வங்கி: Amana Bank Limited Kalmunai