மகிந்த பகி­ரங்க விவா­தத்­திற்கு வரவேண்டும்- ரவி

 

Unknownபுதிய அரசின் திற­னற்ற செயற்­பா­டு­க­ளினால் நாட்டின் பொரு­ளா­தாரத்துறை யில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அர­சிடம் போதி­ய­ளவு நிதி இல்லை எனவும் விகாரை விகா­ரை­யாகச் சென்று பொய்­பி­ர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரும் முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இது தொடர்பில் பூரண விளக்­கத்தை பெற்றுக் கொள்ளவேண்­டு­மாயின் பகி­ரங்க விவா­தத்­திற்கு வரவேண்டும் என்­று நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க அழைப்பு விடுத்தார்.

 

அவ்­வாறு விவா­வ­தத்­திற்கு வரு­வ­தற்­கு முன்னாள் ஜனா­தி­பதி உட்­பட முன்னாள் அமைச்­சர்கள் அச்சம் கொள்­வார்­க­ளாயின் முன்­னைய ஆட்­சியின் கீழ் மேற்­கொண்ட ஊழல் செயற்­பா­டுகள் உட்­பட மக்­களை ஏமாற்றும் நட­வ­டி­கை­க­ளுக்கு பகி­ரங்­க­மாக மக்­க­ளிடம் மன்­னிப்பு கோர வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.

கொழும்பில் அமைந்­துள்ள நிதி அமைச்சில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே நிதி அமைச்­சரும் ஜக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி கரு­ணா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரிவித்தார்.

இதன் போது நிதி அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்.

முன்­னைய ஆட்­சியில் எவ்­வாறு செயற்­பட்­டார்­களோ அவ்­வாறே இன்றும் முன்னாள் ஜனா­தி­பதி உட்­பட முன்னாள் அமைச்­சர்கள் எதிர்­வரும் பொது தோ்தலை இலக்­காக கொண்டு எமது நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போலி­யான பிர­சா­ரங்­களை தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இவர்­களின் தொடர்ச்­சி­யான கருத்­தா­னது இந்த அர­சிடம் அரச ஊழி­யர்­க­ளுக்கு மாத சம்­ப­ளத்தை வழங்­கி­டவும் நிதி இல்லை. எமது பொரு­ளா­தா­ர­மா­னது தற்­போது எல்லா வழி­க­ளிலும் ஸ்திர­தன்­மையை இழந்து வீழ்ச்சி பாதையை நோக்கி செல்­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நாட­ளா­விய ரீதியில் காணப்­படும் புனித தன்­மை­யு­டைய விகா­ரை­களில் பொய்­பி­ரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற அதே­வேளை முன்னாள் அமைச்­சர்கள், எதிர்­கட்­சி­யி­னரும் இத­னையே தொடர்ச்­சி­யாக தெரி­வித்து வரு­கின்­றனர்.

புதிய அர­சாங்கம் ஆட்சி பொறுப்­பேற்று இந்த குறுகிய காலத்தில் மத்­திய வங்­கியின் அறிக்­கையின் பிர­காரம் பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது 6.4 வீத­மாக காணப்­ப­டு­கி­றது முன்­னைய ஆட்­சியின் கீழ் எமது பொரு­ளா­தாரம் வீழ்ச்சி நிலையை அடைந்து காணப்­பட்ட நிலை­யி­லேயே இன்று புதிய அரசின் கீழ் நாம் எமது பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பி உள்ளோம்.

எமது நாட்டின் பொளா­தா­ரத்தின் நிலைமை தொடர்பில் பொய்­பி­ரச்­சா­ரங்ளை முன்­னெ­டுத்து வரும் தரப்­பி­ன­ருக்கு நான் விளக்­க­மாக ஒன்றை கூற விரும்­பு­கின்றேன் எமது பொரு­ளா­தா­ரத்தின் தற்­போ­தய நிலை தொடர்பில் விளக்க வேண்­டு­மாயின் புதிய அரசின் நிதி அமைச்சர் என்ற வகையில் என்­னுடன் பகி­ரங்க விவாத்­திற்கு வரு­மாரு குறிப்­பாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­வுக்கு விசே­ட­மாக அழைப்பு விடு­கின்றேன். அவ­ருக்கு தனி­ம­மை­யாக வரு­வ­தற்கு அச்­ச­மாக இருப்பின் முன்னாள் அமைச்சர் பந்­துல குண­வர்­தன உள்­ளிட்ட சில அமைச்­சர்­களை அழைத்து வரு­மாறு கேட்டு கொள்­கின்றேன்.

எனது அழைப்­புக்கு வர மறுத்தால் முன்­னைய அரசின் மோச­மான செயற்­பா­டுகள் மற்றும் பொய்­பி­ரச்­சா­ராங்கள் தொடர்பில் அனைத்து மக்­க­ளி­டமும் மன்­னிப்பு கோருங்கள்.
எமது புதிய அர­சா­னது ஆட்­சி­பீடம் ஏறி­ய­பின்னர் மக்­க­ளுக்­கான வரி­சுமை குறைக்­கப்­பட்டு நாட்டின் பொரு­ளா­தார ஸ்திர­தன்­மை­கேற்ப அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்­டது எந்த ஒரு உத­வி­களும் இன்றி ஊழி­யர்­க­ளுக்­கான சம்­பளம் நிலுவை இன்றி செலுத்­தப்­ப­டு­கி­றது.

தேவை­யற்ற செல­வுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை அனைத்தும் குறுகிய காலத்தில் செய்ய முடிந்­தது. எமது அர­சுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும். இதனை விமர்­சிப்­ப­தற்கோ போலி­யான பிர­சா­ராங்­களை மேற்­கொள்­வ­தற்கோ எதிர்­கட்சி உட்­பட எந்த ஒரு தரப்­பி­ன­ருக்கும் அதி­காரம் இல்லை.

கேள்வி: – 20 ஆவது திருத்தம் நிறை­வேற்­றப்­ப­டுமா?

பதில்: – மக்­களின் நல­னுக்­காக முற்­று­ழு­வ­து­மாக செய­லாற்றும் எமது கட்­சி­யா­னது எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் மக்­களின் தேவை­கேற்­ற­வாறே செயற்­படும் அந்த வகையில் 20 ஆவது திருத்­தத்தை எந்­நே­ரத்­திலும் நிறை­வேற்ற நாம் தயா­ரா­கவே உள்ளோம்.ஒரு சிலரின் சுய­நல செயற்­பா­டுகள் கார­ண­மாக இவை இழு­ப­றி­நி­லையில் உள்­ளன.

கேள்வி: – பாரா­ளு­மன்றை கலைக்க முயன் றால் புதிய அர­சாங்­கத்தை அமைப்போம் என அத்­து­ர­லிய ரத்ன தேரர் தெரிவிப்­பது தொடர் பில்?

பதில்: அவரின் கருத்து தொடர்பில் எனக்கு எந்த விமர்சனங்களை முன்வைக்க முடியாது.

கேள்வி:- அதிக கடன் சுமை நாட்டில் காணப்படுவதாக குற்றச்சாட்டு தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்-: நாட்டிற்கு தேவையான கடன் குறைந்த வட்டி வீதத்திலேயே பெறப்பட்டுள்ளது. அந்த கடன் அனைத்தும் முன்னைய அரசின் கீழ பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்திடவும் பொருளாதார தேவைக்குமே பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் மக்கள் கவலை கொள்ள வேண்டியது இல்லை.

Tags