இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு !

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.


நேற்று  காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்த  முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு இருபதுக்கு – 20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவுள்ளது.