தென் ஆபிரிக்க நீதிமன்ற உத்தரவை மீறி தாய்நாடு திரும்பும் சூடான் ஜனாதிபதி !

தென் சூடான் ஜனா­தி­பதி ஓமர் அல்–பஷிர் தென் ஆபி­ரிக்­கா­வி­லி­ருந்து தனது தாய்­நாட்­டிற்குத் திரும்­பிக்­கொண்­டி­ருப்­ப­தாக அந்­நாட்டு அர­சாங்கம் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது.

அந்­நாட்டில் 2003 ஆம் ஆண்டு கிளர்ந்­தெ­ழுந்த மோதல்­களின் போது இடம்­பெற்ற போர்க் குற்­றங்கள், மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றச்­செ­யல்கள் மற்றும் படு­கொ­லைகள் தொடர்பில் அவரைக் கைதுசெய்ய உத்­த­ர­வி­டு­வதா இல்­லையா என்­பது குறித்து சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் தீர்­மா­னிக்­க­வி­ருந்த நிலை­யி­லேயே அவர் தாய்­நாடு திரும்பும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார்.

இந்த மோதல்­களில் 3,00,000 பேர் கொல்­லப்­பட்­ட­துடன் 2.5 மில்­லியன் பேர் வீடு வாசல்­களை விட்டு இடம்­பெ­யர்ந்­த­தாக ஐக்­கிய நாடுகள் சபை கூறு­கி­றது.

அவர் தென் ஆபி­ரிக்க ஜொஹன்­னஸ்­பேர்க்கில் இடம்­பெற்ற ஆபி­ரிக்க ஒன்­றிய உச்­சி­மா­நா­மொன்றில் கலந்துகொண்­டு­விட்டே தாய்­நாடு திரும்­பு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
தென் ஆபி­ரிக்க நீதி­மன்­ற­மொன்று பஷிர் அந்நாட்டை விட்டு வெளி­யே­று­வதைத் தடுத்து நிறுத்த அதி­கா­ரி­க­ளுக்கு ஞாயிற்றுக்­கி­ழமை உத்தரவிட்டிருந்தது.

எனினும் அவரைக் கைதுசெய்து தடுத்துவைப்பதற்கான தீர்மானத்தை அது பிற்போட்டுள்ளது.