இலக்ரோனிக் மோட்டார் சைக்கள்கள் பறிமுதல்!

அபு அலா 

அக்கரைப்பற்று நீதிமன்றத்தின் உத்தரவின்பெயரில் பேரில் நேற்றிரவு (16) அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸாரினால் மேற்கெள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக பல (இஸ்கூட்டி) இலக்ரோனிக் மோட்டார் சைக்கள்கள் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இலக்ரோனிக் மோட்டார் சைக்கள் பாவனையாளர்கள் தங்களின் வண்டிக்கு ஆவண பத்திரம் இல்லாமலும் தலைக் கவசம் (ஹெல்மட்) இல்லாமலும் இருந்து வந்தவர்களுக்கு அரசாங்கத்தினாலும், போக்குவரத்து பொலிஸாரினாலும் பல தடவைகள் அறிவுத்தல்கள் வழங்கப்பட்டும் கூட குறித்த மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் அரசாங்கத்தின் சட்டத்தை புரக்கணிப்புச் செய்தும் வந்துள்ளனர்.

இவ்வாறு வீதியால் வந்தவர்களின் இலக்ரோனிக் மோட்டார் சைக்கிள்கள் பல நேற்றிரவு (16) அக்கரைப்பற்று போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட சைக்கிள்களின் உரிமையாளர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை அக்கரைப்பற்று போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

11_Fotor 12_Fotor