ஜனாதிபதி மைத்திரிக்கு ஆதரவாக புதிய அமைப்பு !

Maithri-new
“மைத்திரிக்கு இடமளிப்போம்” என்ற பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அவருக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தி, இந்த அமைப்பு செயற்படவுள்ளது.

ஜனாதிபதி ஆலோசகர் ஸ்ரீலால் லக்திலக்க உட்பட சிலரினால் இந்த அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

20ஆம் திருத்தச்சட்டததை நிறைவேற்றுதல், சுயாதீன ஆணைக்குழு நிறுவுதல் போன்ற முக்கிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக பிரச்சார வேலைத்திட்டத்தை மேற்கொள்வதும், மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்வதும் அமைப்பின் நோக்கமாகும்.

20ஆம் திருத்தச்சட்டததை நிறைவேற்றுதல், சுயாதீன ஆணைக்குழு நிறுவுதல் போன்ற முக்கிய காரியங்களுக்கு தடை செய்யும் நபர்களை குறித்த ஆணைக்குழு ஊடாக வெளிகாட்டவுள்ளதாகவும் ஜனாதிபதி ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.