நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் !

tv-nepal-earthquake_kuma-75

நேபாளத்தில் மீண்டும் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்ச ரேகை 86 டிகிரியிலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 10 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி மற்றும் கடந்த மாதம் 12ஆம் திகதி ஆகிய நாட்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த 2 சம்பவங்களில் சுமார் 9 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அவ்வப்போது நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது