‘தற்­போது திறை­சே­ரியில் தாரா­ள­மாக பணம் நிறைந்து உள்­ளது’-ரவி கரு­ணா­நா­யக்க

images (2)

தற்­போது திறை­சே­ரியில் தாரா­ள­மாக பணம் நிறைந்து உள்­ளது. இதன்­பி­ர­காரம் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் நிதி ஒதுக்­கி­டாது ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி பணி­க­ளுக்கு தற்­போது புதிய அரசின் வேலைத்­திட்­டத்­தி­னூ­டாக நிதி ஒதுக்­கி­யுள்­ள­தாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார்.

 

மேலும் நாட்டின் எந்­த­வொரு அபி­வி­ருத்தி பணி­களும் நிறுத்­தப்­ப­ட­வில்லை. தற்­போது கிரா­மிய அபி­வி­ருத்தி பணிகள் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், வடக்கு அதி­வேக பாதையின் பணி­களும் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பி்ட்டார்.

நிதி அமைச்சில் வைத்து முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை சந்­தித்த பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பி்ல் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சிக்­கா­லத்தின் போது நாட்டில் அபி­வி­ருத்தி பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டாலும் கூட அமைச்­ச­ர­வை­யினால் எந்­த­வொரு நிதியும் ஒதுக்­கி­டப்­ப­ட­வில்லை. இருப்­பினும் குறித்த அபி­வி­ருத்தி பணிகள் ஆடம்­ப­ர­மான முறையில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டன.

அத்­தோடு மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி பணி­களில் கேள்­விக்­கோ­ரல்கள் இல்­லாமல் தரகு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் மஹிந்த ராஜ­ப­க் ஷவி னால் ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி பணி கள் தொடர்பில் முறை­யாக ஆராய்ந்த பின்னர் குறித்த அபி­வி­ருத்தி பணி­க­ளுக்கு விசே­ட­மாக நிதி ஒதுக்­கீடு செய்து அதற்­கான பணி­களை ஆரம்­பித்­துள்ளோம்.

இந்­நி­லையில் எந்­த­வொரு அபி­வி­ருத்தி பணி­களும் இடை­நி­றுத்­தப்­ப­ட­வில்லை. திறை­சே­ரி­யில் தாரா­ள­மாக பணம் உள் ­ளது. நாம் 100 நாள் வேலைத்­திட்­டத் தின் பிர­காரம் சீர்­கு­லைக்­கப்­பட்­டி­ருந்த பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளோம்.மேலும் தற்போது கிராமிய அபிவி ருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட் டுள்ளதுடன், வடக்கு அபிவிருத்திகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என் றார்.