சந்திரிக்காவினால் மைத்திரிக்கு இரகசியக் கடிதம் !

Chandrika-Kumaratunga
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரகசியமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் கடும் விமர்சனங்களுடன் கூடிய விடயங்கள் அந்த கடிதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற பின்னர், கட்சியில் இறுதி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் கட்சிக்கு ஏற்படும் சேதம் சம்பந்தமாகவும் கடும் நடவடிக்கைகள் எடுக்காத காரணத்தினால், முன்னாள் ஜனாதிபதியின் அணி தலைத்தூக்கும் விதம் பற்றியும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதும் இறுதிக்கடிதம் இதுதான் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குறிப்பிட்டிருப்பது இதில் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது என கூறப்படுகிறது.