கிழக்கில் நஸிரிஸ்தான் எனும் தனி முஸ்லிம் நாடு விரைவில் உருவாகும் : உதயகம்மன்பில !

இலங்­கையில் நஸ­ரிஸ்தான் என்ற தனி முஸ்லிம் நாடு விரைவில் கிழக்கில் உத­ய­மாகும் என எச்­ச­ரிக்கை விடுக்கும் பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான உத­ய­கம்­மன்­பில, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கோரிக்­கை­யான கிழக்கில் தனி முஸ்லிம் நிர்­வாக அலகு வழங்­கப்­ப­டுமா என்­பது தொடர்பில் ஜனா­தி­பதி பதி­ல­ளிக்க வேண்­டு­மென்றும் அவர் தெரி­வித்தார்.

Udaya-Gammanpila3

 

கொழும்பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் உரை­யாற்­றும்­போதே உத­ய­கம்­மன்­பில இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த 6 மாதங்­க­ளுக்கு முன்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷ­விடம் கிழக்கில் கரை­யோர பிர­தே­சத்தில் தனி­யான முஸ்லிம் நிர்­வாக அலகை கோரினார். ஆனால் மஹிந்த இதனை நிரா­க­ரித்தார்.

அதன் பின்­னரே ஹக்கீம் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கினார். இன்று முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஜனா­தி­ப­திக்கு முஸ்லிம் அலகு தொடர்பில் நினை­வு­ப­டுத்தி கடிதம் எழு­தி­யுள்ளார்.

பொதுத்­தேர்­தலில் ஆத­ரவு இதன் பின்னர் அறி­விக்­கப்­ப­டு­மென்றும் முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது. இதற்கு ஜனா­தி­பதி என்ன பதில் வழங்­குவார் என்­பதை பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்டும்.
இல்­லா­விட்டால் எதிர்­கா­லத்தில் நஸி­ரிஸ்தான் என்ற தனி முஸ்லிம் நாடு கிழக் கில் உத­ய­மாகும் ஆபத்து உள்­ளது.

வில்­பத்து காடு எவ­ரது ஆட்­சியில் அழிக்­கப்­பட்­டாலும் அது பிழை­யா­ன­துதான். ஆனால் இன்­றைய ஆட்­சி­யி­லேயே வில்­பத்து வனம் அழிக்­கப்­பட்­டுள்­ளது. ரிஷாட்டும் விக்கி­னேஸ்­வ­ரனும் நாட் டின் சட்­டங்­களை மதிப்­ப­தில்லை. அனைவ ருக்கும் சட்டம் பொதுவானது. எனவே இவர்கள் இருவருக்கு மட்டும் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என்றும் உதயகம்மன்பில தெரிவித்தார்.