உள்­ளக பயிற்­சிக்­கூ­டங்­களை அமைப்­பதன் மூலம் வீரர்­களின் திற­மை­களை மேம்­ப­டுத்த முடியும் : சிதத் வெத்தமுனி !

கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறு­வ­தற்­காக உள்­ளக கிரிக்கெட் பயிற்­சிக்­கூ­டத்தை நிச்­ச­ய­மாக அமைத்­துக்­கொ­டுப்போம் என்றும், இதற்கு 50 மில்­லியன் ரூபா செல­வாகும் என்று கணக்­கிட்­டுள்­ள­தா­கவும் அதற்கு மேல் சென்­றாலும் பர­வா­யில்லை எவ்­வ­ளவு செல­வா­னாலும் அதை செய்­து­கொ­டுப்போம் என இலங்கைக் கிரிக்­கெட்டின் தலைவர் சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார்.


இலங்கைக் கிரிக்கெட் தலை­மை­யகத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்­த­முனி, உள்­ளக பயிற்­சிக்­கூ­டங்­களை அமைப்­பதன் மூலம் வீரர்­களின் திற­மை­களை மேம்­ப­டுத்த முடியும். அதே­நேரம் வீரர்கள் விரும்­பிய நேரத்தில் வந்து பயிற்­சி­களில் ஈடு­ப­ட­மு­டியும். இம்­மா­தி­ரி­யான பயிற்­சிக்­கூ­டங்கள் பல நாடு­களில் இருக்­கி­றன. ஏன் பங்­க­ளா­தேஷில் கூட இருக்­கி­றது. இந்த விட­யத்தில் நாம் பத்து வரு­டங்கள் பின்­தங்­கி­விட்டோம். நீச்சல் தடா­கத்­தையும் ஆர்.பிரே­ம­தாஸ மைதா­னத்தில் அமைக்­கபடும் என்றும் அவர் தெரி­வித் தார்.

இந்த வேலைத்­திட்­டத்­திற்­கான அடிக்கல் நாட்டுவிழாவை அடுத்த மாதம் 02ஆம் திகதி நடத்தத் திட்ட மிட்டுள் ளதாகவும் அவர் தெரிவி த்தார்.