கோட்டாபயவின் மனு : தடையுத்தரவை உயர்நீதிமன்றம் உறுதிசெய்தது !

Gota
 பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவை கைதுசெய்யாமல் இருப்பதற்காக உயர்நீதிமன்றத்தினால் முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை, உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை மீண்டும் உறுதிசெய்தது.

 தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

 உயர்நீதமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் அபா ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, உயர்நீதிமன்றம் தனது தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது.