தென்மாகாண சபை உறுப்பினர் உபுல் கைது !

 dv
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த தென்மாகாண சபை உறுப்பினர் டி.வி. உபுல் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமரானால், நிதி மோசடி விசாரணை பிரிவின் கீழ் அதிகாரிகளில் இருந்து அனைவருக்கும் தண்டனை வழங்குவார்.

 அவர்களை கல்லெறிந்து கொல்வதை நாம் பார்த்துகொண்டிருப்போம் என்று உறுப்பினர் டி.வி உபுல், திஸ்ஸமாரகமையில் வைத்து அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர், அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுகொண்டதன் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.