சமூக நலன் பேணும் அமைப்பின் 5 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் !

09_Fotor
பழுலுல்லாஹ் பர்ஹான்
 
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும்(Movement For Social Wellness) எனும்  சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 07-06-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
 
சமூக நலன் பேணும் அமைப்பின் தலைவர் எம்.ஏ. இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்ற இவ் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமில் ஊர் பிரமுகர்கள் ,புத்திஜீவிகள் ,இளைஞர் யுவதிகள் , சமூக நலன் பேணும் அமைப்பின் உறுப்பினர்கள் ,ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இதன் போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்  டாக்டர் விவேக்கினால் பரிசோதிக்கப்பட்ட ஆண்கள் ,பெண்கள் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கினர்.
 
இங்கு சுமார் 75 பேர் தங்களது இரத்தத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்  டாக்டர் விவேக் தெரிவித்தார்.
 
இம் முகாமில் சமூக தொண்டர் சேவை பணிகளை காத்தான்குடி குபா இளைஞர் கழகம் வழங்கியிருந்தது.
 
குறித்த சமூக நலன் பேணும் அமைப்பு குறுகிய காலத்தில் சுகாதார ரீதியான சமூகப் பணிகளை செய்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.
3DSC05202_Fotor 4DSC05198_Fotor 5-DSC05206_Fotor