டுவிட்டரில் பொய்யான தகவலை வெளியிட்ட நாமல் !

நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குண­சே­கரதெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்ஷ இதனை போன்று பொய்யான தகவல்களை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தன்னை எதிர்வரும் 12ஆம் திகதி  குற்றப்புலனாய்வு பிரிவில்   ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.