பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு விசேட தினம் ஒதுக்கி தர கோரிக்கை !

download (3)பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துகொள்வதற்கு விசேட தினமொன்றை ஒதுக்கி தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள அபயாராம விஹாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.