நாமலுக்கு சி.ஐ.டி. நோட்டீஸ் !

z_p04-Namal-celebratesமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில்  காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸை சற்றுமுன்னர் தான் பெற்றுகொண்டதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.