ஸ்ரீ.சு.கட்சியின் வேட்பாளர் விண்ணப்பப்படிவம் 2000 ரூபா!

SLFPஎதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னூ­டாக போட்­டி­யி­டு­வ­தற்­காக விண்­ணப்­பிப்­ப­வர்கள் அந்த விண்­ணப்­பப்­ப­டி­வத்­துடன் 2,000 ரூபாவை கட்சிக் காரி­யா­ல­யத்­துக்கு செலுத்த வேண்­டு­மென கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

அதே­வேளை இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக விண்­ணப்­ப­தா­ரிகள் அனை­வரும் விண்­ணப்ப படி­வத்­துடன் 500 ரூபாவை கட்சிக் காரி­யா­ல­யத்­துக்கு வழங்க வேண்­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2010ஆம் ஆண்டு நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக வேட்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்பப் படி­வத்­துடன் இவ்­வாறு பணம் அற­வி­டப்­ப­ட­வில்லை எனவும், தெரிவு செய்­யப்­பட்ட சகல உறுப்­பி­னர்­களும் கட்­சியின் நிதி­யத்­துக்கு 5 இலட்சம் ரூபா செலுத்த வேண்­டி­யி­ருந்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் மற்றும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் போட்­டி­யிட விரும்பும் வேட்­பா­ளர்­க­ளுக்­கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கான வேலைத்திட்டங்களையும் தீவிர மாக மேற்கொண்டுவருவதாகவும் கட்சி வட் டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.