20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும் துரித தேர்தலை நடாத்த முடியாது !

images (1)புதிய பாரா­ளு­மன்ற தேர்தல் முறை தொடர்­பான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டாலும், பாரா­ளு­மன்றத் தேர்­தலை துரி­த­மாக நடத்த முடி­யா­தென தேர்தல் திணைக்­களப் பேச்­சா­ள­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார்.

புதிய தேர்தல் முறை தொடர்­பான 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பாரா­ளுமன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் தேர்தல் தொகுதி மீள் நிர்­ணயம் செய்த பின்னர் புதிய முறையின் கீழ் பொதுத் தேர் ­தலை நடத்த முடி­யா­தென்ற கருத்து நில­ வி­னாலும் பாரா­ளு­மன்றத் தேர்தல் சட்­ட­மூலம் இதற்கு தடை­யா­க­வி­ருப்­ப­தா­கவும் திணைக்­களப் பேச்­சாளர் தெரி­வித்­துள்ளார்.

இதன்­படி 1981 இலக்கம் 1 பாரா­ளு­மன்ற தேர்தல் சட்ட மூலத்தில் வேட்­பு­மனு கோரல், தேர்தல் நடத்­து­வது, வாக்­கு­களை எண்­ணு­வது மற்றும் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­களை அறி­விப்­பது போன்ற பிரிவுகள் திருத்தப்பட வேண்டுமெனவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.