லண்டன் மாநகரில் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் !

11401415_10207025675985919_8867925421964233428_n_Fotor
லண்டனிலிருந்து மீரா அலி ரஜாய்
பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்தும் அதற்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் கண்டனத்தை வெளியிட கோரியும் இன்று சனிக்கிழமை லண்டன் நகரில் ஆர்ப்பாட்டத்துடன் கூடிய கண்டனப் பேரணி நடைபெற்றது.

 பிரதமர் டேவிட் கெமொரொனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது . இந்த ஆர்ப்பாட்டத்தினை SLMDI UK எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது . இறுதியில் பிரதமரின் அலுவலக அதிகாரியிடம் மகஜரொன்றையும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையளித்தனர்.
 பர்மா நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பிரித்தானியா கண்டிக்க வேண்டும், கடலில் தத்தளிக்கும் பர்மா முஸ்லிம்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் உதவ வேண்டும், போன்ற பல கோரிக்கைகள் அந்த மகஜரில் எழுதப்பட்டுள்ளன. இந்த கண்டன பேரணியில் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான மக்கள் கலந்து
கொண்டனர் .

11390104_10207025687746213_3059558944067267183_n_Fotor 11391439_10207025684386129_2356592550542987003_n_Fotor 11391503_10207025683706112_7304823279805709619_n_Fotor 11403425_10207025678705987_7270755723030634286_n_Fotor 11401437_10207025687226200_6900902329139466014_n_Fotor