இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் எந்த தடங்கலும் ஏற்படாது !

 

இலஞ்ச ,ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் பணியாற்றுகின்ற அதிகாரிகள் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்வதனால் ஆணைக்குழுவின் விசாரணைகள் எந்தவிதத்திலும் தடைப்பட்டு விடாது என இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது. கடந்த சில மாதங்களில் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற 300 முறைப்பாடுகளில் அரைவாசிக்கும் மேற்பட்ட முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகளை நிறைவடைந்துவிட்டன என்றும் அக்குழு அறிவித்துள்ளது.