‘ஜெனீவாவில் தீக்குளிக்கப் போகிறேன்’- அனந்தி

 

annanth-sasi

“எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீ குளிப்பேன்” என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

“நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்.” என்றும் அந்த நேர்காணலில் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.