கல்விமான் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களுக்கான நினைவேந்தலும் நூல் வெளியீடும் அட்டாளைச்சேனையில்…

 

ல்முனை சாஹிறா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் ஞாபகார்த்தமாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இரக்காமம் பிரதேச பழைய மாணவர்கள் (ஸஹ்ரியன்) ஒன்று சேர்ந்து ஹத்தமுல் குர் ஆன் துஆ பிரார்த்த்டனை நூல் வெளியீடும் நினைவேந்தலும், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியில் இருந்து முன்னாள் அட்டாளைச்சேனை  உதவிக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.அம்.வாஹீட் தலைமையில் இடம்பெற இருக்கிறது.

இந்நிகழ்வுகள் கிழக்கிலங்கை அட்டாளைச்சேனை சர்கியா அறபுக்கல்லூரியிலும் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலும்  இடம்பெறும். 

இந்நிகழ்வில் அந்நாரின் குடும்பத்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், அட்டாளைச்சேனையில் உள்ள கல்விமான்கள், பல்துறை சார்ந்தோரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில்

முக்கிய பேச்சாளராக உரை நிகழ்த்த வருகிறார் பிரபல சட்ட வல்லுனர் சபானா ஜுனைதீன்… 

தகவல்: அதிபர் பாஹிம்