சமூக நலன் பேணும் அமைப்பின் 5 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்-நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை -காத்தான்குடியில்

 

பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும்  (Movement For Social Wellness) எனும்  சமூக நலன் பேணும் அமைப்பினால் 5வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 07-06-2015 நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை .830 மணிக்கு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் இரத்ததான முகாமில் தங்களது இரத்தத்தை தானமாக வழங்கவுள்ள அணைத்து சகோதர,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு சமூக நலன் பேணும் அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. MSW-KKY