மகிந்தவின் முக்கிய சகாக்களுக்கு வலை விரிப்பு!

SLFPபாரிய ஊழல்களில் ஈடுபட்ட மகிந்தராஜபக்ஷ அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 50 பேர் குறித்த முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது