யாழை மறுத்த மோடி !

Modi-cm

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, யாழ்ப்பாணத்தில், பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் கலந்துரையாடல் நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறுத்து விட்டதாக இந்திய நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நரேந்திர மோடியின் சிறிலங்கா பயணத்தின் போது, யாழ்ப்பாணம் செல்லும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. அப்போது போரின் பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத குடாநாட்டில் உள்ள தமிழர்களுடன் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழ்த் தலைவர்கள் கேட்டிருந்தனர்.

அதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இல்லை என்று கூறி விட்டார்.

மோடியின் யாழ்ப்பாண பயணம் ஒரு அடையாள நிகழ்வே என்றும், அவர் அதற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கவே விரும்பினார் என்றும் தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய நாளிதழ் தெரிவித்துள்ளது.