வாகன விபத்தில் தந்தையும் , மகளும் பலி !

 accident-logo

 தம்புள்ளை – கெக்கிராவ வீதியில் , புலாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளதுடன்,தாயும் மற்றொரு மகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.