அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் – முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் முன்னோக்கி நகர்வதற்கும் தன்னுடன் இணைந்து செயற்பட்ட அனுபவசாலிகள் நாடாளுமன்றத்திற்கு செல்வது அவசியம் என முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 உங்களது எதிர்காலத்தை புதிய நாடாளுமன்றம் தீர்மானிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான் ஜனாதிபதி தேர்தலில் சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டேன். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் புதிய கூட்டணி ஆகியன ஒன்றிணைந்து எனக்கு ஆதரவளித்தன. இவர்கள் அனைவரும் எனது தலைமையின் கீழ் செயற்பட்டனர்.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைகின்றனர். புதிய ஜனநாயக கட்சியாக போட்டியிடுகின்றனர். எனது தலைமைத்துவத்தின் கீழ் அவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

இவர்கள் அனைவரும் உரிய அனுபவம் உள்ளவர்கள். இவர்கள் கடந்த காலங்களில் தங்கள் பணியை ஒழுங்கான முறையில் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடகாலமாக என்னுடன் இணைந்து செயற்பட்டவர்களுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கான அனுபவம் உள்ளது. ஆகவே அவர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெறவேண்டும். அனுபவம் இன்றி நாடாளுமன்றத்தை நிர்வகிக்க முடியாது. நீங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் தோல்வியடைவீர்கள் என்றார். 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments