முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை நிராகரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.  

ஏலவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் கூட்டுச் சேர்த்து தேர்தலில் போட்டியிட அழைப்புவிடுத்திருந்தார் . அந்த அழைப்பினை சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார் .

பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேனென

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் பாராளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறவோ மாட்டேன் என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவேன் எனவும்முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்..

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.