தலைவர் ஹக்கீமினால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார் ஹரீஸ் எம்பி ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவாரா ஹரீஸ் எம்பி?

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹாரிஸ் எம்.பியை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும் 

ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் எவ்வாறான முடிவுகளை அரசியல் ரீதியாக மேற்கொள்வார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர் . கடந்த வாரம் அலி சாஹிர் மௌலானா அவர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன் வந்தமை குறிப்பிடத்தக்கது .