சஜித் அணியிலிருந்து வெளியேறுகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளுந்தரப்புடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 77,476 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் . களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மொத்தமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .