தேர்தலை நடாத்த பணமில்லை எனக் கூறும் கதை பொய்யாகும் -அனுரகுமார திஸாநாயக்க

ஒரு நாட்டில் சர்வாதிகார அரசாங்கம் தேர்தலைக் கண்டு அஞ்சியே தீரும், அதனையே இந்த அரசாங்கம் நிரூபித்துக் காட்டியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2023) நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலை மக்கள் கேட்கவில்லை என்று அரச தரப்பினர் கூறுகின்றனர்.

ஆனால் அது மக்கள் கேட்பதில்லை. அது அரசமைப்பு ரீதியில் நடத்தப்பட வேண்டியதே.

மக்கள் தேர்தலைக் கேட்கவில்லை என்று கூறுபவர்கள் தேர்தலை நடத்தப் பணம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் இப்படி பணமில்லை என்று தேர்தல் நடக்காவிட்டால் ஜனாதிபதித் தேர்தலுக்கும் இப்படிக் கூறிக்கொண்டு திறைசேரியைச் சீர்குலைத்து ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் பதவியில் இருக்கலாம்.

எவ்வாறாயினும் இவர்கள் பணம் இல்லாத பிரச்சினையில் தேர்தலை நடத்த முடியாது என்று கூறவில்லை.

தேர்தல் முடிவுகளுக்கு அச்சமடைந்தே அவ்வாறு அவர்கள் கூறுகின்றனர், இதனால் பணமில்லை என்று கூறும் கதை பொய்யாகும். எனத் தெரிவித்தார்.