புதிய உறுப்பினராக பதவியேற்றுள்ள UL. உவைஸின் ஊடக அறிக்கை

சாத்தியப்பிரமாணத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கை ,

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம், உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு …

இவ்வாய்ப்பினை ஏற்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும், சிரம் தாழ்த்தி அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்கின்றேன்.

இன்று நடைபெற்ற சத்தியபிரமான நிகழ்வில் கலந்து கொண்ட எல்லா உடன் பிறப்புக்களுக்கும் எனது இதய சுத்தியான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் .

அக்கரைப்பற்று மாநகர ஆட்சியின் கெளரவ உறுப்பினராக நியமனம் செய்த தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அல் ஹாஜ் ALM.ATHAULLAH sir அவர்களுக்கும் கட்சியின் உச்ச பீட, உயர் பீட உறுப்பினர்களுக்கும் கட்சியின் போராளிகளுக்கும் எனது உயர்ந்த மரியாதையையும் உளமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கின்றேன்.

அக்கரைப்பற்று தொழில் நுட்ப கல்லூரி வட்டார கெளரவ மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த சகோதரர் MI. Siraj Mohamed அவர்களை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். மேலும் தொழில் நுட்ப கல்லூரி வட்டார குழுவிற்கும் அவருக்கு வாக்களித்த மக்களுக்கும் அவரின் வெற்றிக்காக உழைத்த இளைஞர் படையணியினருக்கும் எனது விசுவாசத்தினையும் நன்றியையும் கூறுகின்றேன். தொடர்ந்தும் தேசிய காங்கிரஸின் வளர்ச்சிக்காக உங்களின் பங்களிப்பினையும் ஒத்துழைப்பையும் காத்திரமாக வழங்குவீர்கள் என எதிர் பார்க்கின்றேன்

.

இன்றைய நிகழ்வு சிறப்பாக அமைய ஒழுங்குகள் செய்த பெரியபள்ளி வட்டார குழுவிற்கும், பெரியபள்ளி வட்டார இளைஞர் குழுவிற்கும் நன்றிகள் உரித்தாகட்டும்

முகநூல் ஊடாக பதிவுகளிட்டு நேரடியாக வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் , குறுஞ் செய்திகள் மூலமாக வெளிநாடுகளில் இருந்தும் வெளி ஊர்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக தொடர்புகளை ஏற்படுத்தி வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் ஆத்மாத்தமான நன்றிப் பிரேரணையை சமர்ப்பிக்கின்றேன்

இப்படிக்கு ,
என்றும் உங்கள் பணியில்
உங்கள் உவைஸ்