அதிகாரப் பகிர்வு தொடர்பில் தனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் – முன்னாள் ஜனாதிபதி

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.

இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, 

அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.