பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது!

Parliament-Sri-Lanka-interior

அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அமர்வு நடத்தப்படுவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.

இந்த பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு முன்பதாக அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கமையவே பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று முற்பகல் 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது