நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு படையினருக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ள ஜனாதிபதி !

{"uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"]}

அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த உத்தரவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.