அம்பாறை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1608535322732"}

ஏ.எல்.நிப்றாஸ்

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


தமிழ் மொழிமூலத்தில் இயங்கும் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் சம்மாந்துறை, காரைதீவு, மத்தியமுகாம், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, பொத்துவில், திருக்கோவில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள, 1 வருட மற்றும் 6 மாதகால கற்கைகளுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இதற்கமைய, கணிய அளவையியல் டிப்ளோமா, இலத்திரனியல் உபகரண தொழில்நுட்பவியலாளர், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், கணணி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், மின்னியலாளர், குளிரூட்டி மற்றும் வாயுச்சீராக்கி திருத்துனர், வாகன திருத்துனர், அலுமீனியம் பொருத்துனர், செயலாண்மைப் பயிற்சி, நிர்மாணக் கைவினைஞர், கணணி படவரைஞர், உணவு மற்றும் பானங்கள் பரிமாறுபவர், விடுதி அலங்கரிப்பாளர். அதிவேக தையல் இயந்திர இயக்குனர், ஆடைத் தொழிற்சாலை தரக் கட்டுப்பாட்டாளர், தையல், உருக்கி ஒட்டுனர், மரக் கைவினைஞர், பேக்கர், மோட்டார் சைக்கிள் திருத்துனர், எலக்ட்ரிக் மோட்டர் வைண்டர், நீர்க்குழாய் பொருத்துனர் உள்ளிட்ட பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


இவை அனைத்தும் தேசிய தொழில் தகமை (என்.வி.கியு) அடிப்படையிலான, முழுநேரப் பயிற்சிநெறிகள் ஆகும். இது தவிர குறிப்பிட்ட சில பகுதிநேர பயிற்சிநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.


தபால் மூலம் விண்ணப்பிக்க முடியாதவர்கள், தங்களது கைத்தொலைபேசியில் தொ.ப.அதிகார சபையின் பிரத்தியேக ‘செயலியை’ பயன்படுத்துவதன் மூலமோ நிந்தவூர் மா.தொ.ப. நிலைய முகநூல் பக்கத்தில் உள்ள லிங்கை அழுத்தி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதன் மூலமோ இப் பயிற்சிநெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.


அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பி.நளீம் இதுபற்றி கூறுகையில், ‘கொவிட்-19 தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டே நாம் இணைய வழிமுறை ஊடாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கின்றோம். இன்னும் சில நாட்களில் கொரோனா நெருக்கடிகள் முடிவுக்கு வந்த பிறகு இளைஞர், யுவதிகள கவலைப்படுவதை தவிர்ப்பதற்காக, இவ்வாய்ப்பை இப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார்.