பர்மா முஸ்லீம்களுக்காக நாளை நிந்தவூரில் விஷேட துஆ பிரார்த்தனை – றிஸாலா அமைப்பினர் ஏற்பாடு!

myanmar-burma-relief-100212__large

சுலைமான் றாபி

அண்மைக் காலமாக பௌத்த விரோத கடும்போக்காளர்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாகி ஷஹீதாக்கப்பட்ட முஸ்லீம்களுக்காகவும், மேலும் தற்போதும் தொடர்ச்சியாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் பர்மா மற்றும் ரோஹிங்யா முஸ்லீம்களுக்காகவும் நிந்தவூர்  றிஸாலா அமைப்பினர் ஏற்பாடு செய்த விஷேட துஆ பிரார்த்தனையும், பர்மா முஸ்லிம்கள் தொடர்பான சொற்பொலிவும் நாளை (02/06/2015) மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து நிந்தவூர் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம் பெறவுள்ளது.

இது சம்பந்தமான அறிவித்தல்கள் நிந்தவூரில் காணப்படும் சகல பள்ளிவாசல்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டதோடு சமூக சேவை அமைப்புக்கள்,  சகல விளையாட்டுக் கழகங்கள், மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கும் அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.