இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் !

sushma1--621x414

இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான ஓராண்டு ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத் தறை அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இந்தியா தமது நட்பு நாடுகளுடன் தொடர்ந்தும் நல்லுறவை பேணி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

அதற்கமைய தமது நாடுகளுடனான நெருங்கிய உறவு பலப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கையுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.