மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஒரு­போதும் மூன்­றா­வது கூட்­டணி உரு­வா­காது – சுசில் !

timthumb

 ஐக்­கிய தேசியக் கட்­சியே எமக்கு பிர­தான எதி­ரி­யாகும். ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை வீழ்த்­து­வதே எமது கட்­சியின் பிர­தான இலக்­காகும். சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்த நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லாளர் நாய­க­மு­மான சுசில் பிரே­ம்­ஜெ­யந்த தெரி­வித்தார்.

மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் ஒரு­போதும் மூன்­றா­வது கூட்­டணி உரு­வா­காது. அவர் எந்த சந்­தர்ப்­பத்­திலும் கட்­சியை விட்டு வெளி­யேற மாட்டார். அதேபோல் அவரை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கு­வது தொடர்பில் தீர்­மானம் எதுவும் எடுக்­கப்­ப­டவும் இல்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

மஹிந்த தலை­மையில் மூன்­றா­வது அணி எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் கள­மி­றங்கும் என்று செய்­திகள் வெளி­வ்­ துள்ள நிலை யில் அது தொடர்பில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி பல­மான கட்­சி­யா­கவே கள­மி­றங்கும். கட்­சியை இரண்­டாக பிரிக்கும் எண்ணம் எம்­மி­டையே இல்லை. கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணிஅதன் பங்­காளிக் கட்­சி­களை இணைத்­துக்­கொண்டு முக்­கிய பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது.

இதன்­போதும் கட்­சியில் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து பல­மான கூட்­ட­ணி­யாக கள­மி­றக்­கு­வது என்ற தீர்­மா­னத்தை எடுத்­துள்ளோம். ஆகவே எந்த சந்­தர்­பத்­திலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­டணி இரண்டு கட்­சி­யாக கள­மி­றங்­காது.

அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ தனித்து கள­மி­றங்­குவார் என்ற நம்­பிக்கை எமக்கு இல்லை. ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் அவர் முக்­கிய உறுப்­பி­ன­ராக செயட்­ப­டு­கின்றார். கட்­சியில் முக்­கிய தீர்­மா­னங்கள் மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பங்­களில் அவ­ரது ஆலோ­ச­னை­யையும் நாம் கேட்டே செயற்­ப­டு­கின்றோம். அவ்­வா­ற­ன­தொரு நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை புறக்­க­ணித்து செயற்­ப­டுவார் என நாம் நினைக்­க­வில்லை.

மேலும் ஐக்­கிய தேசியக் கட்­சியே எமது பிர­தான எதி­ரி­யாகும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை வீழ்த்தி எமது அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்­பதே எனது எதிர்­பார்ப்­பாகும். அவ்­வா­றா­ன­தொரு நிலை­மையில் எமது கட்­சியை பிள­வு­ப­டுத்தி எமக்குள் இரு அணி­யாக செயற்­ப­டு­வதை நாம் விரும்­ப­வில்லை. அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவு படுத்தி மூன்­றா­வது கட்­சியை உரு­வாக்க எவ­ரேனும் திட்டம் தீட்­டினால் அதை நாம் அனு­ம­திக்க மாட்டோம்.

கட்­சிக்குள் நல்ல ஒற்­றுமை உள்­ளது. அனை­வரும் ஒன்­றி­ணைந்து கட்­சியை காப்­பாற்றி எதிர்­கால அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் தெளி­வாக உள்ளோம். எவ்­வா­றா­ன­தொரு நிலை­மை­யிலும் கட்­சியை பிள­வு­ப­டுத்த அனு­ம­திக்க மாட்டோம்.

மேலும் மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வது தொடர்பில் நாம் இன்னும் தீர்­மானம் எடுக்­க­வில்லை. பொதுத் தேர்­தலை அறி­வித்­த­வுடன் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் இந்த தீர்­மானம் எடுக்­கப்­படும். கட்­சியின் தலைவர் மற்றும் மத்­தி­ய­குழு உறுப்­பி­னர்கள் கலந்­தா­லோ­சித்து அப்­போது உள்ள நிலை­மைக்கு நிலைமைக்கு அமைய சரியான தீர்மானம் எடுப்போம்.

ஆனால் மஹிந்த ராஜபக் ஷ வை பிரதமர் வேட்பாளராக நியமிக்கும் கருத்துகள் தற்பொழுது கட்சிக்குள் ஏற்படவில்லை. ஒரு சிலர் அரசியல் நோக்கத்துக்காக தெரிவிக்கும் கருத்துக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.