எங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ், சாய்ந்தமருதிற்கான சபை மலர்கின்றது

எங்களை நாங்களே ஆளச் செய்த அதாவுல்லாஹ்!
———————————————-
எங்களை நாங்களே ஆளவும் நாங்கள் தனித்துவமாக எழுந்து நின்று வாழவும் வழி செய்த தேசிய காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

சாய்ந்தமருது சமூகம் நன்றி மறக்கும் சமூகமல்ல என்பதன் யதார்த்தத்தை எதிர்காலத்தில் நீங்கள் அறுவடை செய்வீர்கள்.!

அதேவேளை நன்றி மறந்தவர்களால் நாங்கள் ஏமாற்றப்பட்ட சமூகமாகவே இதுவரை வாழ்ந்து வந்த கசப்பான அனுபவங்களும் எங்கள் ஊரின் வரலாற்றில் பதிவாகி விட்டன. இந்த நிலையில், எங்கள் ஊரின் வரலாற்றில் நீங்கள் புதிய ஒரு அத்தியாயத்தை ஆளப்போகிறீர்கள்.

‘இனி நீங்கள் சிங்க நடைபோடுங்கள் நாங்கள் உங்களை சிம்மாசனத்தில் ஏற்றுகிறோம்’

நேற்று முன்தினம் (12) மாலை (நேரம் 5.59) எனது முகநூலில் இது தொடர்பில் ஒரு பதிவிட்டேன். வர்த்தமானி அறிவித்தலுக்கான இறுதி சரிபார்ப்பு முடிந்தவுடனேயே அந்தப் பதிவை இட்டேன்.

இந்த நிலையில், நேற்று ( 13) அந்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமாக இடைநிறுத்த பல சதிகள் அரங்கேற்றப்பட்டன. அனைத்தையும் தனி மனிதனாக நின்று நீங்கள் முறியடித்தீர்கள்.

சதி அரங்கேற்றப்பட்டதனை அறிந்த நீங்கள் உடனடியாக பிரதமரிடம் சென்று நியாயங்களை எடுத்துக் கூறி குறித்த வர்த்தமானி அறிவித்தலை எவ்வித தடையுமின்றி வெளியிடுமாறு எங்களுக்காக மன்றாடியதனையும் அறிவேன் என்பதனையும் இங்கு நான் பதிவிட்டே ஆக வேண்டும்.

இந்த நிலையில் இன்று (14) அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவுள்ளமை குறித்து அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். – ஏ.எச்.சித்தீக் காரியப்பர்