நாமல் பேபியை அடுத்த தலைவராக்கவே நாளை கொழும்பில் போராட்டம் நடக்கின்றது : பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.நாமல் ராஜபக்சவை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார். அதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாளை கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த அணியினரால் நாளை நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.இது புரியாமல் ஏனையோர் பின்னால் அவரிடம் திரிகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ராஜபக்ச படையணியில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. கோத்தபாய, பசில் எனப் பல அணிகள் பிரிந்துள்ளன.இந்நிலையில், நாமல் பேபியை அடுத்த தலைவராக்கவே நாளை கொழும்பில் போராட்டம் நடக்கின்றது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.