நாளை விரும்பியபடி போராடுங்கள்,பொலிஸாரை ஏவிவிட்டு நாம் தாக்குதல் நடத்தமாட்டோம் : சட்டம், ஒழுங்கு அமைச்சர்

மஹிந்த அணியான பொது எதிரணியினர் கொழும்பில் நாளை நடத்தவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் ஊடாக அரசு நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார நிராகரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று மஹிந்த தரப்பால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரால் மேற்படி குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.இதேவேளை, போராட்டங்களை முடக்க வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது. விரும்பியபடி போராடுங்கள்.பொலிஸாரை ஏவிவிட்டு நாம் தாக்குதல் நடத்தமாட்டோம். பாதுகாப்பை வழங்குவோம். நீதிமன்றத் தடை உத்தரவை நாம் பெறவில்லை என்றும் அமைச்சர் அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.