இலங்கை – மலேஷியாவுக்கு இடையில் மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மலேஷிய பிரதமர நஜீப் பின் துன் அப்துல் ரஸாக், இன்று காலை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை சந்தித்தார். 

இதன்படி, ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த மலேசிய பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிழ்ச்சியுடன் வரவேற்றார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன. 

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் மூன்று ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. 

இதேவேளை, மலேஷிய பிரதமருக்கான உத்தியோக பூர்வ வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலககத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்றது. இதன்போது 21 மரியாதை வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.