ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 41 நீதிச் சேவை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

நீதிச் சேவை அதிகாரிகள் 41 பேருக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதவான்கள் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான்கள் இந்த இடமாற்றங்களில் உள்ளடங்குகின்றனர்.

கல்முனை, நுகேகொடை, புத்தளம், சாவகச்சேரி,  மன்னார், யாழ்பாணம், நீர்கொழும்பு, வெலிமட, மொனராகலை, மூதூர், வவுனியா, மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் மட்டக்களப்பு, நீர்கொழும்பு, நுவரெலியா, மாலிகாகந்தை, மஹர, மாதர, கேகாலை, பலபிட்டிய, பிபில, எம்பிலிபிட்டிய மற்றும் ஆனமடுவ நீதவான்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

வருடாந்த இடமாற்ற நடைமுறைகளுக்கு அமையவே இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது