உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் உள்ளிட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் கைது

 

சவூதி அரேபியாவில் 11 இளவரசர்கள், ஆட்சியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் 12 முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்செய்தியை, சவுதி அரேபியாவின் அல்-அரேபியா சேனல் வெளியிட்டுள்ளது.சவூதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. அரசின் முக்கிய பொறுப்புகளில் மன்னர் குடும்பத்தினரே இருந்து வருகின்றனர்.மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான், பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

 

இதன்படி ஊழலுக்கு எதிராக அவர் தலைமையில் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.இந்த கமிஷன் அமைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை, பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.கோடீஸ்வரரான அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.